கட்டுரைகள்,நிழற்ப்படங்கள்

Wednesday, October 17, 2012

பரிசு


சீர்வளர்சீர் பேரூரடிகளாரின் 89வது நாண்மங்கல விழாவில் மாற்றுத் திறனாளி ஒருவர் வழங்கிய அன்புக் காணிக்கை.

Wednesday, October 3, 2012

அருளாட்சி ஏற்பு திருவோலக்கம்


பேரூராதீனத்தின் குருமகாசன்னிதானமாக அடிகளார் அவர்கள் அருளாட்சி ஏற்கும் திருக்கோலம்.

Sunday, August 26, 2012

இட்டலிங்க கைத்தலமாலை

பண்ணு பாமறை தமிழினால் பாடு நம்பிக்குப்
பொன்னும் ஆடையும் அணிகளும் ஊர்தியும் பொருளும்
இன்னும் ஈபவன் அருளினான் மேவி வீற்றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ! எனது கைத்தலமே.

Tuesday, July 31, 2012

முனைவர்.சுந்தரமூர்த்தி அவர்கள்

பாரதீய வித்யாபவனில் நடைபெற்ற தமிழ்மாமணி விருது வழங்கும் விழாவில் முன்னாள் துணைவேந்தர்.சுந்தரமூர்த்தி அவர்கள் விருதினைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய ஏற்புரையின் சில பகுதிகள். பேரூர் அடிகளார் அவர்களின் அரிய முயற்சியின் காரணமாகத்தான் கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுவிக்கும் பேராசிரியர்கள் இன்று நல்ல ஊதியத்தைப் பெற்று வருகின்றனர் என கூறினார்.


Tuesday, April 10, 2012

கபிலர் விருது


தமிழக அரசின் கபிலர் விருது பெறும் திரு.அ.அ.மணவாளன் அவர்கள் பேரூர் தமிழ்க்கல்லூரியின் மேனாள் மாணவர்.அண்மையில் பிர்லா அறக்கட்டளையினரால் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சரசுவதி சம்மான் விருதினைப்பெற்றவர்.40க்கும் மேற்ப்பட்ட உலக மொழிகளில் எழுதப்பட்ட இராமகாதையை ஆய்வுசெய்து இவர் எழுதிய நூலிற்காக பரிசினைப்பெற்றவர்.அன்னாரை பேரூரடிகளாரும்,இளைய அடிகளும் வாழ்த்தினர்.

Tuesday, February 21, 2012

சிவனிரவுப்பெருவிழா

சிவனிரவுப்பெருவிழாவினை முன்னிட்டு செம்மேடு அருகில் உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு முட்டத்து நாகேசுவரர் திருக்கோயிலில் சீர்வளர்சீர் பேரூரடிகளார் அவர்களால் வழிபாடுகள் மிகச்சிறப்பாக நடத்தப்பெற்றது.













Sunday, February 19, 2012

தமிழ்மாமணிவிழா-உரை

பாரதீய வித்யாபவன் கோவை கிளையில் மேனாள் துணைவேந்தர்.முனைவர்.திரு.சுந்தரமூர்த்தி அவர்களுக்கும்,முனைவர்.திரு.சென்னியப்பன் அவர்களுக்கும் தமிழ்மாமணி விருது வழங்கி அடிகள்பெருந்தகை வாழ்த்தி ஆற்றிய உரை

Thursday, January 12, 2012

உழவர் திருநாள் வாழ்த்து

சீர்வளர்சீர் சாந்தலிங்கஇராமசாமிஅடிகளார்அவர்கள் தமிழர் திருநாளாம் உழவர்தினத்தினை ஒட்டி அன்பர்களுக்கு அளித்துள்ள வாழ்த்துச்செய்தி

Saturday, January 7, 2012

தமிழிசைச்சங்கம்

சென்னை தமிழிசைச்சங்கத்தின் 65ஆம் ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு குருமகாசன்னிதானம் அவர்கள் ஆற்றிய உரை.உடன் நீதிஅரசர்.கோகுலகிருட்டிணன்,நீதிஅரசர்.இலட்சுமணன் மற்றும்
நல்லிசின்னசாமி அவர்கள்


Friday, January 6, 2012

குன்றக்குடி அடிகளார்

திருவண்ணாமலை குன்றக்குடிஆதீனத்தின் குருமகாசன்னிதானம் சீர்வளர்சீர் பொன்னம்பல அடிகளார் அவர்கள் தமிழ்க்கல்லூரியின் பாவை விழாவிற்கு 4.01.2012 புதன்கிழமை அன்று எழுந்தருளி அருளுரை வழங்கினார்கள்









விசுவ இந்து பரிசத்

விசுவ இந்துபரிசத்தின் அயல்உலக செயல்தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.அசோக்சௌக்லே அவர்கள் குருமகாசன்னிதானங்களைச் சந்தித்து ஆசிபெற்றார்.